Saturday 3 March 2018

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எப்படிச் செயல்படுகிறது?


மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எப்படிச் செயல்படுகிறது?





இன்றைய தேதியில் முதலீட்டுக்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக, மியூச்சுவல் ஃபண்ட் மட்டுமே நம்முடைய முதலீட்டைப் பெருக்குவதற்கும், முதலீட்டைப் பாதுகாப்பதற்கும், நிரந்தர வருமானத்தை ஈட்டுவதற்கும் பேருதவியாக இருக்கிறது.

“எந்த ஒரு செயலுக்கும் குறிக்கோள் மிக அவசியம். அதைப்போல முதலீடு செய்யும்போதும் நமது குறிக்கோளைப் பிரதானப்படுத்தி அந்தக் குறிக்கோளுக்கு உதவியாக இருக்கும் முதலீட்டுக்கான ஃபண்ட்களைத் தேர்வுசெய்ய வேண்டும். நம்முடைய குறிக்கோளை அடைவதற்கு எந்த மாதிரியான வழியைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிந்துகொள்வது அவசியம்.

ஒருவருக்கு இரண்டு வயதில் மகனோ / மகளோ இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவர்களது உயர் கல்விக்கோ, திருமணத்துக்கோ ஒரு பெரிய தொகை வேண்டுமென்றால், அந்தப் பெரிய தொகை எவ்வளவு வேண்டும் என நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். 

குறைந்தது 16 வருடங்கள், அவர்களுக்கு நீண்டகால குறிக்கோளாக வைத்துக்கொண்டு, ஒரு நல்ல டைவர்சிஃபைட் (diversified) அல்லது குழந்தைகளுக்கு பிரத்யேகமான திட்டத்தில் மாதத்தின் அடிப்படையில் (SIP) முதலீடு செய்தால், அந்த முதலீடு எத்தனை சதவிகிததில் (8%, 10%, 12%) வளர வேண்டும் என்பதற்கான முதலீட்டைத் தேர்ந்தெடுத்துகொள்ளலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தங்களது முதலீட்டின் உண்மையான நிலையை அறிய மாதாமாதம் அறிக்கையை (Fact Sheet) வெளியிடுகிறார்கள்.

இதை எல்லோராலும் மிக எளிதாகப் பார்க்க முடியும். ஒரு டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்ட் என்னவென்றால், அதில் பல நிறுவனங்களின் பங்கு பத்திரங்களை (Shares) வாங்கியும் விற்றும் அதன் மூலம் வரும் லாபங்களில் அதற்கான செலவினங்களைக் கழித்துக்கொண்டு மீதம் உள்ள தொகையை வளர்த்துக்கொண்டே வரும்.

இதை யூனிட் ஆகப் பிரித்து, தின அடிப்படையில் அதன் மதிப்பை வெளியிடுகிறார்கள் (NAV).

தின அடிப்படையில் அதன் மதிப்பை (NAV) அறிவிப்பதால், அதில் பல மாற்றங்கள் ஏற்ற-இறக்கத்துடன் இருக்கும். இதைத்தான் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என எச்சரிக்கின்றனர். ஒருவர் முதலீடு செய்யும்போது அவரது குறிக்கோள் நீண்டகால அடிப்படையில் இருந்தால் இந்த ஏற்றத்தாழ்வுகளை மனதில் கொள்ள வேண்டாம். உதாரணமாக, குறிப்பிட்ட ஒரு மியூச்சுவல் ஃபண்ட் ஆரம்பநிலையில் 08-10-1995 அன்று முகமதிப்பு 10 ரூபாய். அதன் இன்றைய முகமதிப்பு 1,069 ரூபாய் 62 பைசா. 22 வருடங்களில் அதன் முதலீட்டு மதிப்பு 106 மடங்கு உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியை அடைவதற்கு பெரும் முயற்சிகள் எதுவும் தேவையில்லை. மிக எளிதான வழியில் எந்த ஒரு கடினமான ஆவணங்கள் இல்லாமல் முதலீடு செய்யலாம்.

ஒருவர், வேறு முதலீடுகள் செய்வதால், அதைப் பாதுகாப்பதற்கும் ஆவணங்களைப் புரிந்துகொள்வதற்கும் பல சிரமங்கள் உள்ளன. ஆனால், மியூச்சுவல் ஃபண்டில் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் அந்தக் குறிக்கோளுக்கு இணங்க ஒரு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்தால் வாழ்க்கை வளமாகும்.

நல்ல முதலீட்டுத் திட்டம் என்னவென்று எடுத்துரைக்க, நிதி ஆலோசகர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் தங்களது குறிக்கோளையும் நோக்கத்தையும் கூறினால், அதற்கு ஏற்றாற்போல் அதற்கான முதலீடுகளில் முதலீடு செய்வதற்கு வழிவகுப்பார்கள்.

முதலீட்டாளர்கள் இதில் உள்ள நிறைகளைப் புரிந்துகொண்டு முதலீடு செய்வதற்கு முன்வர வேண்டும். இதில் முதலீடு செய்வதற்கு பல வழிமுறைகளும், மிக எளிதாக அவர்கள் முதலீட்டை உயர்த்துவதற்கு ஏதுவாக இருக்கின்றன.
நம் பொருளாதாரத்தில், முதலீடு செய்பவர்கள் பலரும் சிறு மற்றும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நீண்டகால அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவந்தால், வளமான வாழ்க்கை வாழ்வதற்கு உறுதுணையாக இருக்கும்"

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189



No comments:

Post a Comment